Wednesday, March 7, 2018

தமிழ் நாடகமேடையும் , யூஏஏவும் - 2

1917 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் பிறந்தவர் ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள்
1948ல் திருமதி ராஜம்மாளுடன் திருமணம்.
1950ல் பிறந்தார் மகேந்திரன்
அந்நாள் ஆணாதிக்கம் அதிகம் இருந்த நாட்கள்..ஆனால் அந்நாளிலேயே, ஒய்ஜிபி எவ்வளவு பரந்த மனப்பான்மையுட ன் இருந்தார், பெண்கள் முன்னேற வேண்டும் என நினைத்தார் என்பதற்கு ஒரு உதாரணம்

திருமணம் ஆகி வந்ததுமே, ராஜம்மாவிடம், "நீ சமையல் வேலையே செய்ய வேண்டாம்.சமையல் அறைக்குப் போக வேண்டாம்.வேண்டுமானால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பி.சமூக சேவை செய்" என கூறினார்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமதி ஒய்ஜிபி யே சொன்னார்.அத்துடன் மட்டுமல்லாது, "இதுநாள் வரை சமையல் அறைக்குச் சென்றதில்லை"என்றும் கூறினார்.

ஒய்ஜிபியின் பரந்த மனதினைப் பாருங்கள்

1952ல் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழுவினை ஆரம்பித்தார் என முன்னமேயே சொன்னோம்.அப்போது மகேந்திரனின் வயது இரண்டு.அந்த இரண்டு வயதில் ஆரம்பித்த குழுவினை, இன்று மகேந்திரன் கட்டிக் காத்து வ்ருகிறார் என்பதே சிறப்பு

ஒய்ஜிபிக்கு ஒழுக்கம், நேர்மை தவறாத  குணம் இருந்தது.அதையே, தன்  குழுவினரிடமும் எதிர்பார்ப்பார்.
யாராவது, நாடக ஒத்திகைக்கு தாமதமாக வந்தால், அவரை கண்டபடி திட்டிவிடுவார்.ஆனால், அடுத்த நிமிடமே,  வந்த கோபம் மறைந்து குழந்தையாய் ஆகிவிடுவார்.

அவரைப் புரிந்து கொண்டவர்கள்,ஒருநாள் ஒய்ஜிபி தங்களைத் திட்டவில்லையென்றால், அவருக்கு உண்மையிலேயே நம் மீது கோபமோ? என எண்ணிவிடுவர்

யூஏஏவில் நடித்து வெளியே வந்த பிரபலங்கள் பலர்..உதாரணமாக...ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, வித்யாவதி(சந்தியாவின் சகோதரி), லட்சுமி,நாகேஷ்,சோ, மௌலி,ஏ ஆர் எஸ்., விசு, ராதாரவி இப்படி நீண்டுக் கொண்டே போகும் பட்டியல்

ஒருசமயம் ஒய்ஜிபி ., மகேந்திரனிடம், ;"என் காலத்திற்குப் பிறகு, இக்குழுவினை நீ விடாமல் நடத்த வெண்டும்" என்ற உறுதிமொழியைப் பெற்றார்.அன்று தந்தைக்கு அளித்த உறுதிமொழியம், மகேந்திரன் காப்பாற்றி வருவது பாராட்டுக்குரியது

300க்கும் மேல் பட்ட படங்களில் நடித்திருந்தும், வருடம் 30 படங்கள் என்ற நிலை இருந்த போதும், தவறாமல், நாடகங்களை அவர் நடத்தி வந்தது/ வருவது பாராட்டுக்குரியது ஆகும்.

இனி வரும் அத்தியாயங்களில், யூஏஏவின் நாடகங்களைப் பார்ப்போம் 

No comments: