Thursday, March 17, 2016

கலைஞரின் பன் முகங்கள்



நான் எழுதி வரும் "தமிழ் நாடக வரலாறு' நூலில்..கலைஞர் பற்றிய குறிப்பு
(புத்தகத்தின் ஒரு முன்னோட்டம் என்று கூறலாமா?)

"திராவிடக் கழகக் கொள்கைகளை நாட்டு மக்களுக்குப் பரப்புவதில் அண்ணாவிற்கு இணையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த கலைஞரின் "பராசக்தி" மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம்.

கடவுள் பெயரைக் கூறி இழிவான செயல் புரிபவர்களின் பித்தலாட்டங்களை வெளிக் கொணர்ந்தது "பராசக்தி" நாடகம்.பின்னர் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சஹஸ்ரநாமம் நடிக்க படமாக வந்து. மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

பெண்களின் உரிமைக்காக இவரால் எழுதப்பட்ட நாடகம் "நச்சுப் பொய்கை"

கலைஞர் எழுதிய "தூக்கும் மேடை". ஒரே முத்தம்" பழக்கூடை" "வெள்ளிக் கிழமை" ,"காகிதப்பூ", போர்வாள்", ஆகிய அனைத்துமே சீர்திருத்த நாடகங்கள் ஆகும்.காகிதப் பூ நாடகத்தில் கலைஞரும் நடித்தார்.

இணையற்ற நாடக ஆசிரியர், இலக்கியவாதி, பாடலாசிரியர்,கதை வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர்,நாவலாசிரியர்,தொல்காப்பிய பூங்கா சமைத்தவர், குறளோவியம் கண்டவர், என அனைத்துத் துறையிலும் கோலோட்சி நின்றதுடன்...இணையில்லா மக்கள் தலைவராகவும் திகழ்கிறார்.

இந்த அதிசயம் வேறு எந்த எழுதாளர்களுக்கோ...தலைவர்களுக்கோ கிடைக்காத பேறு எனலாம்