Monday, February 15, 2016

கருத்துக் கணிப்புகள்



இந்தக் கருத்துக் கணிப்புகள்...துல்லியமாய் இருக்கும் என் சொல்லமுடியாது.

சுமார் ஐந்தரைக் கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் 5000 பேரிடம் கருத்துக் கேட்டு, இந்தக் கட்சிக்கு ஆதரவு..அந்தக் கட்சிக்கு ஆதரவு என்றெல்லாம் சொல்வது மக்களை திசை திருப்புவது போலத்தான்.

பிகாரில், சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாபகம் இருக்கிறதா...

பிஜேபி யே வெல்லும் எனக் கருத்துக் கணிப்புகள் சொல்லியது.வாக்குகள் எண்ணத் தொடங்கி சில மணிகளில், பிஜேபி அதிக இடங்களில் முன்னணியில் இருந்ததால், அக்கட்சியினர் வெற்றி உறுதி என பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.

ஆனால்....வாக்குகள் எண்ணப்பட, எண்ணப்ப்ட ..பிஜேபி பரிதாபத் தோல்வியும், நிதீஷ்-லாலூ கூட்டணி மகத்தான வெற்றியும் பெற்றது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்....

கருத்துக் கணிப்புகள் எல்லாம், யாரையாவது திருப்தி படுத்தவே எடுக்கப் படுவதாகத் தோன்றுகிறது.

இது உண்மை என அத்தலைவர்களுக்கும் தெரியும்.

இதனால், மக்கள் நிலைப்பாட்டையும் மாற்றமுடியாது.  இதுவும் அவர்களுக்கு தெரியும்.

கடைசியாக யாரோடு யார் கூட்டணி வைத்தாலும்....எக்கட்சியும் சேராது...தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் மக்கள் கையிலேயே வெற்றி..தோல்வியைத் தீர்மானிக்கும் திறன் உள்ளது.

இதுதான் உண்மை 

No comments: