Monday, April 6, 2015

குறுந்தொகை-205




நெய்தல் திணை -பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்;-


மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க

விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு
,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,

கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,

இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;

யாங்கு அறிந்தன்றுகொல் தோழி! என்

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?


                                   -உலோச்சன்

மழைமேகங்கள் அன்னம் சிறகை விரித்தது போல நகர்ந்து கொண்டு இருக்கின்றன. தலைவன் என்னுடன் கூடியபின்,கடலலைச் சரலால் நனைந்த சக்கரங்களைக் கொண்டத் தேரில் ஏறி இங்கிருந்து சென்று விட்டான்.இது எப்படி எனது நெற்றிக்குத் தெரிந்தது.அது பசலையால் அழகிழந்துத் தெரிகிறதே!(எனத் தோழியிடம் உரைக்கின்றாள்)

No comments: