Monday, February 9, 2015

குறுந்தொகை-191




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)

முல்லை திணை -
 
இனி பாடல்-

உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
   
நோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம்
   
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா
   
தீங்குர லகவக் கேட்டு நீங்கிய

ஏதி லாள ரிவண்வரிற் போதிற்
   
பொம்ம லோதியும் புனையல்
   
எம்முந் தொடாஅ லென்குவெ மன்னே.



 தோழி,  இதனைஎன்னென்று சொல்வேன்?  வலியமரக்கிளையில் இருந்த, பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள்,  தாம் துணைகளோடு சேர்ந்தமையால், துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நம்மைப் பிரிந்த, அயற்றன்மையை உடையதலைவர்,  இங்கே மீண்டு வந்தால்,  மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக,  எம்மையும் தொடுதலை யொழிக, என்று கூறுவம்;  அங்ஙனம் செய்தலை,உவ்விடத்துப் பார்ப்பாயாக.

   

    (கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.

No comments: