Thursday, February 5, 2015

குறுந்தொகை-188


தலைவி கூற்று

(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)


முல்லை திணை - பாடலாசிரியர் மகனார்மள்ளனார்

இனி பாடல்-


முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
   
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
   
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
   
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.



 முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன;  எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி,  மாலைக் காலம் வந்தது;என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.



    (கருத்து) கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.

 
   (பொருளீட்டச் சென்ற தலைவன், தலைவியிடம், "கார் காலத்திற்குள் திரும்புவேன் என்று கூறிச் சென்றான்.ஆனால், கார் காலம் வந்தும் அவன் வராத்தால் தலைவி வருந்தி, அதைத் தன் தோழியியம் சொல்கிறாள்)

No comments: