Saturday, December 6, 2014

குறுந்தொகை-170




தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளிட்ட தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை தாங்கமாட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை நான் அறிந்துள்ளேன்; . அதனால் நான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கருவூர் கிழார்

பலருங் கூறுகவஃ தறியா தோரே
 
அருவி தந்த நாட்குர லெருவை
 
கயநா டியானை கவள மாந்தும்
 
மலைகெழு நாடன் கேண்மை

தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.


                                  -கருவூர் கிழார்.

உரை-

  தோழி, நான், அருவியால் தரப்பட்ட, காலத்தில் விளைந்த கொத்தையுடைய -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது,  கவளமாக உண்ணும், மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை,  நன்றாக, அறிந்துள்ளேன்.  அதனை, அறியாதோர் பலரும் தமக்குத் தோன்றியவற்றைக் கூறுக.



    (கருத்து)தலைவன் என்னை மணமுடிப்பான் என துணிவுடன் உள்ளேன்.

No comments: