Friday, November 28, 2014

குறுந்தொகை -162


முல்லைத் திணை- பாடலாசிரியர் கருவூர் பவுத்திரன்

இனி பாடல்-

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
   
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
   
முல்லை வாழியோ முல்லை நீநின்
   
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல்
   
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

.
                             -கருவூர்ப் பவுத்திரன்.


உரை-

 முல்லையே,  நீ வாழ் வாயாக.  முல்லையே,  மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற,  நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண், பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,  நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால்,  புன்னகை கொண்டாய்; தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால், எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?

 
    (கருத்து) நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.

No comments: