Friday, November 14, 2014

குறுந்தொகை-155


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர்  ஒரோடகத்துக் காரத்தனார்

இனி பாடல்-

முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
   
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
   
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
   
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி

மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு
   
மாலை நனிவிருந் தயர்மார்
   
தேர்வரு மென்னு முரைவா ராதே.
                       
                       - ஒரோடகத்துக் காரத்தனார்.)

உரை-

பழங்கொல்லையை உழுத மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய, காலையிலே விதையை விதைக்கும் பொருட்டு எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள் விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி மாலைப் பொழுது வந்தது.மெழுகால் செய்த கருவில் அமைத்து ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய பிளவுபட்ட வாயையுடைய மணிகள் மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்துஒலிக்கும்படி அருவழியைக் கடந்து மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய தேர் வருகின்றதென உரை வந்திலது


 (கருத்து) மாலைக் காலம் வந்தும் தலைவர் வந்திலர்.

No comments: