Thursday, October 30, 2014

குறுந்தொகை -145


தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்து சென்றது நீடிக்க அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு தங்குமிடமில்லை” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கொல்லனழிசி
   

இனி பாடல்-

.  
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
   
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி
   
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட்
   
டுஞ்சா துறைநரொ டுசாவாத்

துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.


                                       =கொல்லனழிசி.

   உரை-

கடல் துறை பொருந்திய இந்தச் சிற்றூர் , கடற்கரையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுநிசியில் துயிலாமல் தங்குவாரை..ஏன்? எனக் கேட்காத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய மாக்களோடு நெடிய இரவை உடையது.அதனால் இது நாம் தங்கியிருக்கும் ஊர் அன்று


      (கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.

No comments: