Friday, July 18, 2014

குறுந்தொகை -47



தோழி கூற்று
(தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் சமயம் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் வந்து தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்யவில்லை"
 என்று கூறி இரவு தலைவன் வருவதை விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது))

குறிஞ்சி திணை _ பாடலாசிரியர் நெடுவெண்ணிலவினார்

இனி பாடல்-

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
   
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
   
எல்லி வருநர் களவிற்கு
   
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.

                         -நெடுவெண்ணிலவினார்

உரை -
 நீண்ட நேரம் காயும் வெண்ணிலவே! கரிய அடியடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும் காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.



  கருத்து _ தலைவன் தலைவியைக் காண இரவில் வருதல் இனி நல்லதல்ல, அவர் அவளை விரைவில் மணக்க வேண்டும்)

   (இரவில் வேங்கை மலர் பரவிய குண்டுக்கல்லை புலியென எண்ணித் தலைவன் அஞ்சக்கூடும்

1 comment:

ஹிஷாலி said...

குறுந்தொகை அழகு