Saturday, July 12, 2014

குறுந்தொகை -38



குறிஞ்சி திணை -கபிலர்

தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணக்க பொருளீட்ட சென்று நெடுங்காலமாக வாராதிருக்கவே, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, "உன்னை மணந்து கொள்ளும் பொருட்டே அவர் பொருளீட்டச் சென்றார்; அப்படியிருக்க  நீ அதனை நன்று என கருதாமல் வருந்துவது ஏன்?’ என்று வினவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்னிடம் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை -  பாடலாசிரியர் கபிலர்)

இனி பாடல்-

 
கான மஞ்ஞை யறையீன் முட்டை
   
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
   
குன்ற நாடன் கேண்மை யென்றும்
   
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
5
நீரொ டொராங்குத் தணப்ப
   
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.

                            - கபிலர்
    உரை -

காட்டிலுள்ள மயிலானது, பாறையில் இட்ட முட்டைகளை, வெயிலில் விளையாடும் முசு குட்டிகள்(முகம் கருகிய ஒருவகை குரங்கு) உருட்டுவதற்கு இடமாகிய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு பிரிய, மை தீட்டப்பெற்ற நின் கண்ணினின்று உருகும் நீரோடு நில்லாது,அப்பிரிவிவை எண்ணி வருந்தாமல் பொறுத்துக் கொள்ளுதல் வன்மையுடையவர்க்கு மாத்திரம் எக்காலமும் நல்லதாகும் (ஆகவே பிரிவை பொறுத்து கொள்)
   

  கருத்து - தலைவனின் பிரிவை பொறுக்கும் வல்லமை தலைவிக்கு இல்லை

No comments: