Wednesday, July 9, 2014

குறுந்தொகை - 34






(தலைவியை மணந்து கொள்ள வந்துள்ளவனே அவளால் விரும்பப்பட்டவனாதலின், இனி அவன் தன்னை மணப்பான் எனும் செய்தியைக் கேட்டு இதுவரை உண்டான பலவகைத் துன்பங்களும் இன்றி இவ்வூரினர் மகிழ்வாராக என்று தோழி தலைவிக்கு உணர்த்தியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் கொல்லிக் கண்ணன்.

இனி பாடல்-
 
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்
   
தமிய ருறங்குங் கௌவை யின்றாய்
   
இனியது கேட்டின் புறுகவிவ் வூரே
   
முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ

டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉம்
   
குட்டுவன் மரந்தை யன்னவெம்
   
குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே.

                         _கொல்லிக் கண்ணன்.
பாடலின் உரை-
 முதலில் உள்ளதாகிய கடற்கரையில் உள்ள வண்டாழ்ங்குருகின் பெரிய தொகுதியானது பகைவரைக் கொன்ற வீரரது வென்று முழங்கும் முழக்கத்தினை அஞ்சுவதற்கிடமான குட்டுவனுக்குரிய மரந்தை என்னும் நகரைப் போன்ற எங்களது இச்சை விளங்குகின்ற அழகிய நெற்றிக்கு உரிமையுடையோளும், வரைவோடு வரும் அத்தலைவனே, தமர் ஒறுக்கவும், வருத்தத்திலிருந்து நீங்காராகி,மறிப்பத் தோழிய பல காரணங்கள் கூறி வருந்துதல் தகாது என்று மறுத்து கூறவும் தெளியாராகி தலைவரையும் பிரிந்து தனியாய்
உறங்கும் வருத்தம் இல்லாதவராகி இவ்வூரில் உள்ளார்.அவன் உன்னை மணந்து கொள்வான் எனும் இனிய செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைக.

(தலைவன் தலைவியை விரைவில் மணக்க உள்ளான்)

(நாம் அவனை தண்டித்தால் அவன் அதை பொருட்படுத்த மாட்டான்.நாம் அவனை மறுத்தால், அதைப்பற்றியும் கவலைப்படமாட்டான்.
ஊர் இதனைப் பற்றி முணுமுணுக்காமல் விடமாட்டான்.ஊரார் எங்கள் உறவைப் பற்றி புறங்கூறி முணுமுணுக்கட்டும்.அவளின் காதலன் அவன் என பேசட்டும்.
அவளது நெற்றி மறந்தை துறைமுகம்.மறந்தை அரசன் குட்டுவனது.அங்கே நாரைகள் பெரியளவில் மல்லர்களிம் பறை ஓசைக் கேட்டு பயப்படுகின்றன.


பாடல் தரும் செய்தி சுருக்கம்-

No comments: