Thursday, December 5, 2013

சிவராமனின் கவசம்..




நண்பர் பைத்தியக்காரர் சிவராமின் 'கர்ணனின் கவசம்' அமானுஷ்யத் தொடர்..குங்குமத்தில் தொடராக வந்து இந்த வாரத்துடன் நிறைவுபெறுகிறது.

என்ன ஒரு இடியாப்பச் சிக்கல் கதை..

எந்த ஒரு தொடரிலும்,  அந்தந்த பாத்திரங்களை நினைவு வைத்திருக்க முடிந்த நம்மால்...இந்தத் தொடரில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் நினைவு கூற முடியுமா? என்பது சந்தேகமே...

ஒரு வாரம் படிக்கும் போதே...முந்தைய சில வாரத்து புத்தகம் எடுத்து, மீண்டும் பழைய அத்தியாயத்தை நினைவில் கொண்டுவர வேண்டி இருந்தது.

இதையெல்லாம், பல வேலைகளிடையே, நினைவில் நிறுத்தி மிக அற்புதத் தொடரை அளித்த சிவராமன் பாராட்டுக்குரியவர்.

அவரிடம் ஒரே ஒரு கேள்வி..

முழுத் தொடரையும் முதலிலேயே எழுதி விட்டாரா? அல்லது...அந்தந்த வாரத்திற்கான சினாப்சிசை முதலிலேயே குறித்துக் கொண்டு எழுதினாரா?

நான் ஒரு துணுக்கு எழுதி இருந்தேன் முன் ஒருமுறை..

ஒரு மெகாசீரியல் இயக்குநரைச் சுற்றி..ஒரே காகிதக் குப்பைகள்..அவர் என்ன செய்கிறார்..

தன் தொடரில் எந்தெந்த பாத்திரங்களை எங்கு விட்டார் எனத் தேடிக்கொண்டிருக்கிறார் என..

அந்த துணுக்கு இப்போது ஞாபகம் வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு அற்புதத் தொடரை அளித்ததுடன் மட்டுமல்லாது, இத் தொடரால் பிற சில வாரப்பத்திரிகைகளும் தொடர்கதைகளை வெளியிடும் போக்கை மீண்டும் ஆரம்பிக்க காரணமாய் இருந்த சிவராமனுக்கு மீண்டும் பாராட்டுகள்.

ஹேட்ஸ் ஆஃப் சிவராமன்.