Tuesday, October 8, 2013

அட்டை படும் பாடு...



அந்த வீட்டில் எல்லா முடிவையும் அம்மாதான் எடுப்பார்.ஆனால் அப்பா முடிவெடுப்பது போல தோன்றும்.அம்மாவும், ஊரில் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.தவிர்த்து, இக் குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உச்ச முடிவு அப்பாவையேச் சேரும் என்றும் ஒரு மாயத் தோற்றம்.

அவர்களது மகனுக்கான அத்தியாவசிய செலவுகளில் ஏற்றம் காரணமாக அவனுக்கு விழும் பற்றாக்குறையை அம்மா தருவார்.திடீரென அம்மாவிற்கு, தான் கொடுக்கும் பற்றாக்குறையை மகன் நேரில் வாங்கக் கூடாது எனக் கருதி மகன் பெயருக்கு ஒரு அட்டையை வழங்கி, மகனிடம் அவ்வட்டையைக் காட்டி வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பிக்கும் படியும், அவனது பற்றாக்குறை பணத்தை தான் நேரிடையாக வங்கியில் செலுத்தி விடுவதாகவும், இது கட்டாயம் என்றும் கூறினார்.

உடன், மகன் அப்பாவிடம் இதை எடுத்துச் சென்றார்.

அப்பா , அம்மாவிடம் சொன்னார், 'அவன் நம் மகன்.அவனுக்காகத் தான் நாம் இருக்கிறோம், அவனிடமிருந்தே பெற்ற அவன் பணத்தில், அவனுக்கு பற்றாக்குறை ஏற்படுகையில் நாம் கொடுக்க வேண்டியது கடமை.இதற்கு அட்டையெல்லாம் ஏன்? வீண் செலவு..தவிர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன்? ஆகவே அட்டையே  தேவையில்லை என்றார்?'

மகனுக்கோ அப்பா இப்படி சொன்னது ஒரே சந்தோஷம்.

ஆனால், அம்மாவோ, இந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்..ஆகவே அட்டை அவசியம் என தனது வீடோ பவரை உபயோகித்தார்.

அப்பாவிற்கும், மகனுக்கும் வாய் பேச வார்த்தையில்லை.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாயத் தோற்றம் மாற வேண்டும்...

ராஜி said...

எல்லார் வீட்டுலயும் இப்படித்தானா!?

ராஜி said...

எல்லார் வூட்டுலயும் மீனாட்சி ஆட்சிதானா?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜி