Monday, January 28, 2013

முறித்துக் கொள்ளவாநட்பு..??


நாம் ஒரு பதிவிடும்போதே அதை பலர் படிக்க வேண்டும் என விரும்புகிறோம்.சக பதிவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து படிக்கையில் மனம் குதூகலிக்கிறது.
அடுத்ததாக மனம் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது.
நாம் மற்றவர்கள் வலைப்பூவிற்கும் சென்று..அவர்கள் இடுகையைப் படித்து..பின்னூட்டம் இட்டால்..அந்த பதிவரும் நம் வலைப்பூ பக்கம் வந்து..நம் இடுகையையும் படித்து பின்னூட்டம் இடுவர்.
சுருங்கச் சொன்னால்..ஒத்தையடி பாதை அல்ல இது..நீ என்ன செய்கிறாயோ..அது உனக்குத் திருப்பிக் கிடைக்கிறது.
இந்த கூற்றை யாரும் மறுக்க முடியாது..அப்படி மறுப்பவர்கள் உண்மை பேசுபவர்களாக இருக்க முடியாது.
அடுத்தாக..இடுகையும் படிக்கின்றனர்,பின்னூட்டமும் வருகிறது..இனி வாசகர் பரிந்துரையில் இடுகை வர ஏங்குகிறோம்.யாரேனும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தால்..தமிழ்மண வாசகர் பரிந்துரை நிச்சயம்.நிலைமை இப்படியிருப்பதால் தான் பிறந்த நாள் வாழ்த்துகள்,கட்சி சம்பந்த பட்ட இடுகைகள்,சினிமா இடுகைகள் (திரைமணத்தில் இப்போது) பரிந்துரையில் பரிந்துரைக்கப் படுகின்றன.
இந்நிலையில்..நமக்கு வரும் பின்னூட்டங்கள் நம் எதிர்பார்ப்புக்கு இருக்க வேண்டும்..நம் எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும் என எண்ணுவது தவறாகிறது.
எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்துக் கொண்டவர்கள் இருப்பர்.
நம் இடுகையை பாராட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல மாற்று கருத்துகளையும் மகிழ்வுடன் ஏற்க மனம் மறுக்கிறது.
சமயங்களில் மாற்று கருத்து இடுவோரும்..வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. இப்போது இடுகைகள் போதாது என buzz,facebookஆகியவற்றி


லும் உடனுக்குடன் சூடாக பின்னூட்டங்கள்,சாட் பண்ணுதல் மூலம் கிடைத்து விடுகிறது.
முகம் அறியாமலேயே..நட்பு வட்டம் பெருகுகிறது.மனித நேயம் வளர்கிறது என்றெல்லாம் இருந்தாலும்..சமீப காலங்களில் சில சமயங்களில் வரம்புகள் மீறப்படுகின்றன.
சமீபத்தில் இப்படி தேவையில்லாமல் ஒரு சர்ச்சை உருவாகி..நான் இப்படித்தான் விமரிசிப்பேன்..வேண்டுமானால் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பொருள் படும் படி எழுத ஆரம்பித்து விட்டனர்.உங்களுக்கு நட்பு கொள்வதற்கும்,வேண்டாம் எனில் முறித்துக் கொள்ளச் சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது..அந்த தனி மனித சுதந்திரத்தை..இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் அதே நேரத்தில் உங்கள் மீது உள்ள தவறையும் உணருங்கள்.
நினைத்தபோது நட்பு கொள்ளுதலும் நினைத்த போது முறித்துக் கொள்வதும் தான் நட்பிற்கு அடையாளமா?
யாருக்காகவோ..அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா?
மனம் வருந்துகிறது..
(மீள் பதிவு)

2 comments:

கார்த்திக் சரவணன் said...

ஏன் இப்படி... எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளவும்...

வருண் said...

என்ன சார் பிரச்சினை?

ஓ!!! மீள்பதிவா?! :-)