Thursday, September 13, 2012

வாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே??!!




தேர்தலில் வெற்றி தோல்விகளை வேட்பாளர்கள் பெறும்வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

வேட்பாளர்களின் திறமையையோ..தகுதியையோ யாரும் கணக்கெடுத்து வாக்களிப்பதில்லை.அப்படி அளித்தாலும் அந்த வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவே வாக்குகள் பெற முடியும்.

பல தேர்தல்கள் முடிவகளை கள்ள ஓட்டுகளும்..ஏற்கனவே அடக்கமானவர்கள் மீண்டு வந்து போடும் வாக்குகளும் தீர்மானித்துவிடும்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..வாக்குகள்...என்ற பெயர் எங்கு வந்தாலும்..அங்கு ஊழல், கள்ள வாக்கு  ஆகியவற்றை தவிர்க்க முடியாது.

அதே தான் தமிழ்மணத்திலும் நடைபெறுகிறது..

இங்கு தரமான பதிவுகள் ..குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெறாது..பரிந்துரையில் வரமுடியாது டிபாசிட் இழக்கின்றன.

சில பதிவுகள் குறைந்த பட்ச வாக்குகளை..நண்பர்கள் மூலம் பெற்று..பதிவரின்..டிபாசிட்டை தக்க வைத்துக் கொள்கின்றன.

சில கள்ள வாக்குகள் ..இங்கு..ராங்க் ஐடி கள் மூலம் விழுகின்றன.இதற்கு குறிப்பிட்ட பதிவரை குற்றம் சாட்டி பயனில்லை.

முடிந்தால்..குற்றம் சாட்டுபவரும்..தன் பதிவிற்கு இதே போல் வாக்குகள் அளித்து மகுடம் சூட்டிக் கொள்ளட்டும்.

இதற்கு..இம்முறையை ஒழிக்க வழியே இல்லையா??

இருக்கிறது..வாசகர் பரிந்துரையை ஒருமுறை..இதே போன்ற நிலை வந்ததால்..தமிழ்மணம் சில காலம் நிறுத்தி வைத்தது.அது போல மீண்டும் செய்ய வேண்டும்..அல்லது..அதிக வாக்குகள் பெறும் பதிவுகள் என்பதை மாற்றி வேறு முறை ஏதேனும் கொண்டுவர வேண்டும்..

ஏனெனில்..வாக்குகள் என்றாலே..மக்களுக்கு..கூடவே கள்ளத்தனமும் கூடுவது இந்திய ஜனநாயகத்தின் வாடிக்கைதானே!

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

என்ன பண்வது ஆசை யார தான் விட்டுச்சு....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)