Sunday, August 19, 2012

காதலும்..திருமணமும்...




ஓரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்..

அதற்கு அந்த ஞானி, 'அது இருக்கட்டும்..முதலில் நீ ரோஜா தோட்டத்திற்குப் போ..அங்கு உயரமான ரோஜாச் செடி எது என எண்ணுகிறாயோ, அதை எடுத்துக்கொண்டு வா..ஆனால் இரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது' என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, 'எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?' என்றார்.

சீடான் சொன்னான். 'குருவே..வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னை கவர்ந்தது.அதைவிட உயரமான செடி இருக்கக் கூடும் என தொடர்ந்து நடந்தேன்.ஆனால்..பின் தென்பட்டவை அனைத்தும் குட்டையான செடிகளே..வந்த வழியே திரும்பிவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியை கொண்டுவர முடியாமல் போய் விட்டது'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் காதல்'..பின்னர் ஞானி சொன்னார், 'சரி போகட்டும்.அதோ அந்த வயலில் சென்று உனக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலான ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது'

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், 'இதுதான் அந்த தோட்டத்தில் அழகான சூரியகாந்திச் செடியா?'

சீடன் சொன்னான், 'இல்லை.இதைவிட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் இம்முறை முதல்முறை கோட்டை விட்டதுபோல இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியை பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப் படி ஒரு செடியை பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்பிறகு இதைவிட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் திருமணம்'

(ஓஷோ)  

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கதை
உண்மையும் கூட



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. ரசித்தேன்... மிக்க நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 3)

Admin said...

exelant...

Mr.E said...

Good one! liked it!