Monday, August 13, 2012

ஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை




 ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் ஆகியோரின் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த போராட்டம் காற்று நிரப்பப்படாத ஒன்று. இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாட்டில் ஊழல் நிறைந்திருக்கும். இந்தக் காலமாற்றத்தில் எந்தவிதமான நன்னெறியையும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய காலமாற்றத்தைக் கடந்து நாடு முன்னேறிச் செல்ல அறிவியல் சார்ந்த, நவீன கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவச் செய்ய வேண்டும். இதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சமநிலையிலும், நவீனமயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் கட்ஜு.

டிஸ்கி - இதைத்தான் பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிவிட்டார்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

எந்த காலத்திற்கும் பொருந்தும் பாட்டை குறிப்பிட்டது சிறப்பு...

நன்றி… (TM 2)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...