Tuesday, July 31, 2012

ரூபாய் பத்தாயிரம் பரிசுக் கதை..




ஒவ்வொரு ஆண்டும் 'அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியை' கல்கி வார இதழ் நடத்தி வருகிறது.பரிசு பெறும் முதல் கதைக்கு ரூ.10000 மும் இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக தலா 7500, 5000 வழங்கி வருகிறது.தவிர்த்து பிரசுரிக்க தேர்வான கதைகளுக்கும் அதற்கான சன்மானத்தை அளித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான நடுவர்களாக வெ.இறையன்பு மற்றும் இயக்குநர்,நடிகை ரோகிணி ஆகியோர் பொறுப்பேற்று ஆசிரியர் குழுவினரோடு இணைந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாண்டு 10000 ரூ பரிசு பெறும் முதல் பரிசுக்கான  'போன்சாய் நிழல்கள்' தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இதை எழுதியவர் செம்பை முருகானந்தம்.திருச்சியைச் சேர்ந்தவர்.
கதை இவ்வார கல்கியில் வெளிவந்துள்ளது.

கதை நடை..ஒருவர் கேள்விகளைக் கேட்க மற்றவர் பதில் சொல்வது போல அமைந்துள்ளது.கடைசியில் கேள்வி கேட்பவர் யார், பதில் சொல்பவர் யார் என்று இரண்டுவரிகளை படிக்கையில்...'ஆஹா...முதல் பரிசுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட கதை' என்று மனம் துள்ளல் போடுகிறது.

கதையை முழுதுமாக விமரிசப்பதுடன்..அதைப் படித்துப் பார்த்தால்தான் சுவையை அனுபவிக்கமுடியும்.

சிறுகதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகள் கதாசிரியருக்கு மட்டுமல்ல..இக்கதை பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும்.

இதை சிறந்த கதையாக தேர்ந்தெடுத்த நடுவர்களின் கருத்து...

ரோஹிணி - தி.ஜா.வின் கதைகள் படிக்கும் போது யார், எங்கே, எவருடன் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள சில வரிகள் ஆகும்.அப்படியொரு தன்மை இந்தக் கதையில் பார்க்க நேர்ந்தது.இறையன்பு சுட்டிக்காட்டியிருப்பது போல் இந்தக் கதை இன்றைய காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

இறையன்பு - இன்றைய சூழலில் குழந்தைகளின் மனத்தில் அன்புடன் விதைக்கப்படும் கல்வி எவ்வளவு இனிய அனுபவமாக மாறும் என்பதை உணர்த்தும்  அழகான சிறுகதை.உயரிய உத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக்கதை அவாமிகுந்த பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படுத்தக்கூடியது.


டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?




 


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

(தட்ஸ்தமிழ்)

Monday, July 30, 2012

மீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி



 பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
சென்னையில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானார். இதைத் தொடர்ந்து வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தார்கள். இந்நிலையில் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.
வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)


Sunday, July 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ



டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பயணிகள் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ் 11 கோச்சில் 72 பயணிகள் வந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்

கவிஞர் வாலிக்கு இது அழகா....




கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான்(கலாரசிகன்) என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
 ""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
 "சாக்கடையில் விழுந்தாலும்
 சந்தனத்தில் விழுந்தாலும்
 எதுவுமே -
 ஒட்டிக் கொள்ளாமல்
 உள்ளது உள்ளபடியே
 எழுந்து வருகிறது -
 என்னுடைய நிழல்.
 நிழலுக்கு இருக்கும் - இந்த
 நிட்காமிய ஞானம் - என்
 உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
 காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!

(நன்றி தினமணி)




Saturday, July 28, 2012

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...




இப்போதெல்லாம் பரவலாக பல அரசியல்வாதிகள் சொல்வது..'சட்டம் தன் கடமையைச் செய்யும்' ..

அப்படியென்றால் என்ன...

சட்டம் தவறு செய்பவரை முதலில் கைது செய்யும்..

கைது செய்யப்பட்டவர்..ஜாமினில் வெளிவருவார்..

வழக்கு நடைபெறும் ..பல ஆண்டுகள்..சில நூறு வாய்தாக்களுடன்..

சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு...அவர் மேல் முறையீடு செய்ய சில மாதங்களையும் கொடுக்கும்..

மேல் கோர்ட்டில் குற்றவாளியாய் கீழ் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டவர்..மேல் முறியீடு செய்வார்..வழக்கு நடக்கும்..

இதில் சாதகமாய் தீர்ப்பு இல்லையெனில்..பெஞ்ச், உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என வழக்கு தொடரும்  ஆண்டு கணக்காய்..

இதனிடையில் சம்பந்தப்பட்டவர் அமரர் ஆகியிருப்பார்..அல்லது காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்படும்..

சட்டம் தன் கடமையைச் செய்த திருப்தியில் அனைவரும் இருப்பர்..


Friday, July 27, 2012

தமிழ்ப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் படம்...




கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம். ஆனால் படம் முழுக்க கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலை தூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டது.
ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.
இப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.
இப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.
இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்
ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.
சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.
குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து ஹாலிவுட்டில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹாலிவுட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கூறினார்.
ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(தகவல்-தட்ஸ்தமிழ்)


Thursday, July 26, 2012

உயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துக்கொண்ட வழக்கு...





 ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Monday, July 23, 2012

பாக்கியராஜ் பதில்...




பாக்யா பத்திரிகை ஜூலை 27 ஆம் நாள் இதழில் கேள்வி பதில் பகுதியில் பாக்கிராஜின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு உபயோகமான சொல்... இது கேள்வி..அதற்கான அவர் பதில்..

'விழித்திரு' ஏன் இதற்கு முக்க்யத்துவம் என்பது கீழே உள்ள விஷயத்தை படிச்சா புரியும்..

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும்  'சந்தர்ப்பம்' பற்றி வித்தியாசமாக படம் பிடித்துக் காட்டுகிறார். அதுதான் சந்தர்ப்பம் என்னும் சிலை.அந்த சிலைக்கு இரண்டு சிறக்கைகள் இருக்கும் முன்னந்தலையில் கூந்தலும், பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.

'உனக்கு இறக்கை எதற்கு?'

நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக'

;முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?'

'மக்கள் என்னைப் பற்றி கெட்டியாக பிடித்துக் கொள்வதற்காக!'

'ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?'

"சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோரிடமிருந்து கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!'

'பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?'

"சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்னை மீண்டும் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக"

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்க..இது மூலமா நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.ஒருமுறை சந்தர்ப்பம் நழுவி விட்டால், அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?


Friday, July 20, 2012

ஜாமீனுக்கே 100 கோடி லஞ்சமா..? அம்மாடி..





ஹைதராபா‌த்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி, தனக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் தர முன்வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மற்றொரு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியான லட்சுமி நரசிம்ம ராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார்.

ஊழல் தடுப்புப் பிரிவு போலீசா‌ர் நடத்திய விசாரணையில், ஜனார்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் தருவதற்கு ஏற்பாடு செய்யும்படியும், ஜாமீன் வழங்க ஒப்புக்கொண்டால் ரூ.100 கோடி தருவதற்கு தயாராக உள்ளதாகத் தன்னிடம் கூறியதாக லட்சுமி நரசிம்ம ராவ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


Thursday, July 19, 2012

தமிழ்மண முன்னணி பதிவுகள்..




கடந்த இரு ஆண்டுகளாக முன்னணி பதிவுகள் என தமிழ்மணம் ரேங்க் பட்டியல் வெளியிடுகிறது.

இதில் முதல் 10 ரேங்கிற்குள் வரவேண்டும் என்பதே பல பதிவர்கள் விருப்பமாய் உள்ளது.

அதற்காகவே தினம் பதிவு போடுபவர்கள், கவர்ச்சிகர தலைப்பு வைப்பவர்கள் என பதிவர்கள் பலவகை உண்டு. நம் வலைப்பூவிற்கு படிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாய் உள்ளது.

இந்நிலையில் , இவ்வாண்டு முடிய இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில்,  பல பதிவர்கள் முழு மூச்சுடன் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.இதில் சில மூத்த பதிவர்களும் உண்டு.

இதைத்தவிர்த்து..சிலர் சில விருதுகளை எதிர்பார்த்தும் பதிவுகள் இட்டு வருகின்றனர்.

அவரவர் திறமை பளிச்சிடவும், எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துகள்.

Wednesday, July 18, 2012

தமிழ்மொழி..தமிழன் பற்றி தமிழச்சி.




தமிழ்மொழி பற்றி கூகுள் பிளஸ்ஸில் தமிழச்சியின் பகிர்வு எனக்குப் பிடித்திருந்தது..அதை உங்களுக்கு பகிர்கிறேன்..


Tuesday, July 17, 2012

ஜனாதிபதி தேர்தல்: மம்தா அறிவிப்பு



 குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.

பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை வேறுவழியில்லாமல் ஆதரிப்பதாக மமதா கூறியுள்ளார். அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.

மமதாவின் இந்த அறிவிப்புக்கு பிரணாப் முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.


Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலும்..திருமங்கலம் ஃபார்முலாவும்...




பல ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வழக்கத்தை அனைத்து கட்சிகளும் செய்து வந்தாலும், திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகே, அப்படிப்பட்ட செயலில் வெல்லும் கட்சி திருமங்கலம் ஃபார்முலாவில் வென்றதாக ஊடகங்கள் சொல்லின.

கிட்டத்தட்ட அதே நிலை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நடை பெற உள்ளது.

என்ன ..ஒரு வித்தியாசம்...தேர்தல்களில் மக்களின் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன..

ஆனால் இத்தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வாங்கப்படுகிறார்கள்..அக்கட்சியின் மூலம்...அதாவது அக்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி என கோடிக்கணக்கில் வழங்கப் படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பீகாரில் நிதிஷ்குமார் ஆதரிப்பதால் சிறப்பு நிதி வழங்கப்பட்டது.உத்தரபிரதேசத்திற்கும், முலாயம் சிங் ஆதரவு கிடைத்துள்ளதால் நிதி வழங்கப்பட உள்ளது.

மம்தா ஆதரவு கிடைக்குமேயாயின்..மேற்கு வங்கத்திற்கும் அவர் கேட்கும் நிதி வழங்க மைய அரசு தயாராய் இருக்கும்.

சாதாரண வாக்காளர் ஓட்டு போட சில ஆயிரம்...

மாநில அரசு ஆதரிக்க பல கோடி.

வாழ்க இந்திய ஜனநாயகம்.


(செய்தி - உத்தரப்பிரதேசத்திற்கு கிட்டத்தட்ட 450 பில்லியன் ரூபாய்க்கான ஃபைனான்சியல் பேக்கேஜ் தர மைய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாம்.இது ஜனாதிபதி தேர்தலில் மைய அரசை ஆதரித்ததற்காகவும், எதிர்காலத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் காக்கவும்தானாம்)

Friday, July 13, 2012

இதயமில்லா ரயில்வே ஊழியர்..




 The General Manager                                                                      12.07.2012
Southern Railway
Chennai 600 003.


Sir,

Sub: Heartless Railway Employee – Punishable Action Requested.

Marina an employee at the Saidapet Railway Station behaves recklessly with a Differently Abled ticket buyer. The visually impaired    Mr.  Dharmaraj   was asked to go back and come in the queue every time he reached the window to buy his ticket. This was done in spite of   Mr.  Dharmaraj strictly following the queue pattern. When, another visually impaired person and our association vice president Mr.  Elumalai questioned it she answered callously saying that she will not issue any ticket come what may. All along she was issuing season rickets.

Another employee Prabhu joined hands with Marina to say that the ticket will not be issued to Mr.  Dharmaraj until he goes back to the tail end of the queue. This went on 11/07/2012 from 3pm to 4 52 pm and finally Mr.  Dharmaraj got his ticket.

All this took place in broad daylight with many men and women standing there. No body bothered to intervene, which shows the utter indifference pervading among humanity. A visually impaired person takes the complaint to the Station Master. Another Railway employee seated in the office admits to know of the rude behavior of Marina, but the Station Master does not express anything and seems to have taken no action against the rude Marina

The Differently Abled cannot be taken for granted and their self respect cannot be insulted in such a mean way. We request you to take immediate action has to be taken against Marina and Prabu.

If strict punishable action is not taken against them, a protest by disabled citizens will be organized in front of Southern Railway head office.

Thank you Sir.

Yours truly,

S. Namburajan-94442 95994
State Secretary.
Copy to: The DRM, Chennai Divisaion.



--
S. NAMBURAJAN
State Secretary, Tamilnadu Assn for the Rights of
All Types of Differently Abled & Caregivers - TARATDAC
New No.69, VGP Road, West Saidapet, Chennai 600 015.
# 044-23713161   Fax: 044-23715491    94442-95994

(இந்த செய்தி எனக்கு மெயிலில் வந்தது.விமல்வித்யா என்பவர் அனுப்பியிருந்தார்.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.)




Thursday, July 12, 2012

'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!



 நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.
அதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போட்டனர்.
ஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.
போராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

நன்றி தட்ஸ்தமிழ்


Monday, July 9, 2012

எப்படி இருந்த பிரணாப்...! இப்போது இப்படி..




பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி குறித்து நய்யார் குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல்..
அப்போது நான் ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ரெசிடென்ட் எடிட்டராக இருந்தேன். எனக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தனது வீட்டுக்கு வர வேண்டும் என்றும் தன்னுடன் டீ சாப்பிட வேண்டும் என்றும் அவர் அழைத்தார். அப்போது அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.
நான், எனது மனைவியுடன் பிரணாப் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்குள் போனபோது ஹாலில் எந்தவிதமான பர்னிச்சரையும் பார்க்க முடியவில்லை. உட்காரக் கூட போதுமான சேர்கள் இல்லை, ரொம்ப ரொம்ப குறைவான சேர்களே இருந்தன. வீட்டில் வேலைக்காரர்கள் கூட யாரும் இல்லை. வீடு முழுக்க எளிமை நிரம்பி வழிந்தது. நான், எனது மனைவி மற்றும் பிரணாப் ஆகிய மூவரும் தரையில்தான் அமர்ந்தோம். பேசிக் கொண்டே டீ சாப்பிட்டோம்.

பிரணாப் முகர்ஜியின் மனைவி ஒரு டான்ஸர். ஆனால் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார். பிரணாப் என்னிடம் பேசுகையில், தனது மனைவிக்கு ஒரு நல்ல விளம்பரத்தைத் தேடித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, ஏன் என்னை அவர் கூப்பிட்டார் என்று.
சில வருடங்கள் ஓடின. 'மிசா' முடிந்திருந்த நேரம். இப்போது மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். அதே பிரணாப் முகர்ஜிதான், ஆனால் வீடுதான் மாறிப் போயிருந்தது. வீடு நிறைய ஸ்டைலான பர்னிச்சர்கள் நிரம்பி வழிந்தன. விலை உயர்ந்த தரை விரிப்புகள் பளபளவென தரைகளை அலங்கரித்தன. எங்கு பார்த்தாலும் ஆடம்பரம் கொட்டிக் கிடந்தது. அப்போது பிரணாப் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்....!!

(நன்றி தட்ஸ்தமிழ்)


Sunday, July 8, 2012

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 0





 உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் 12 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளை அள்ளிச் சென்றது. லக்னோ, மீரட், கான்பூர், ஆக்ரா, வாரணாசி, ஜான்சி, கோரக்பூர், அலிகார், மொரதாபாத், காஜியாபாத் ஆகியவை பாஜக வசமாயின.

மற்ற 2 இடங்களில் அலகாபாத் மாநகராட்சி மேயர் பதவியை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் அபிலாஷா குப்தா கைப்பற்றி உள்ளார். இவர் மாநில முன்னாள் அமைச்சர் நந்த் கோபால் குப்தாவின் மனைவி ஆவார். பரேலி மேயர் பதவியை ஆளும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஐ.எஸ். டோமர் கைப்பற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இப்போது மாநகராட்சி மேயர் தேர்தலில் அக்கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.


பிரபல பதிவரின் தந்தையார் அமரர் ஆனார்




பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார்

 எழுத்தாளர் ஏ.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மதியம் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 85.
1960 - 70 களில் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளிலும் சிறுகதைகள், தொடர்கதைகள், குறுந்தொடர்கள் எழுதியவர். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்ற இவர், எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஓர் சமூக ஆர்வலராகவும் விளங்கியவர். இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்துவந்தார்.
மறைந்த ஏ.எஸ்.ராகவன், எழுத்தாளர்கள் ஷைலஜா, ராஜரிஜி ஆகியோரின் தந்தை. எழுத்தாளர் இந்திராசௌந்தர்ராஜனின் பெரியப்பாவுமாவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
ஷைலஜா, ராஜரிஷி ஆகியோருக்கு இப்பிரிவை தாங்கும் திறனை அளிக்க இயற்கையை வேண்டுகிறோம்.



Friday, July 6, 2012

தாம்பரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி:




தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கள் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டிஸ்கி- பெங்களூருவில் பயிற்சிக்கு மாற்றப்பட்டனர் அவர்கள். மத்திய அமைச்சர் வாசன் எதிர்ப்பு, கலைஞர் ஆட்சேபம்...ம்..ஹீம்.. என்ன பிரயோசனம்...எருமை மாட்டின் மீது பெய்யும் மழை..என எருமையைக் கேவலப்படுத்த நான் தயாரில்லை.



Monday, July 2, 2012

தர்மம் - குறும்படம்




கலைஞர் டீவியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஒலி/ஒளீ பரப்பான குறுந்தொடர்.

இதன் கரு, படமாக்கியவிதம் அனைத்தும் சிறப்பு.இதை நீங்களும் காண வேண்டும் என்பதால் இந்த பதிவு


பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்





 குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர்.
சுப்பிரமணியசாமி அதிரடி
இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார்.
ஒருவேளை சங்மாவுக்கு போட்டுக் கொடுத்ததே சுப்பிரமணியசாமியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் எப்படியும் தேர்தலில் அதிசயம் நிகழ்ந்து வெற்றி பெறுவேன் என்று சங்மா கூறிவந்தார். பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் நிலையில் சங்மாவின் ஆருடம் பலித்துவிடும்! நாட்டின் அரசியலில் பெரும்பரபரப்பும் ஏற்பட்டுவிடும்!

(நன்றி - தட்ஸ்தமிழ்)