Wednesday, March 21, 2012

திருமங்கலம் ஃபார்முலாவும்...சங்கரன்கோவிலும்...




சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

சாதாரணமாக பார்த்தால்..இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆளும் கட்சிதான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகம் உடையது.தவிர்த்து பணமும் இது போன்ற தேர்தல்களில் இறைத்துவிடப்படுகிறது கட்சிகளால்.

சமீபகாலமாக..இது போல பணத்தால் வெல்லப்படுவதை 'திருமங்கலம் ஃபார்முலா' என்கிறார்கள்.

இச்சமயத்தில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...பணம் கொடுக்கப்படும் வழக்கத்தை ஆரம்பித்ததே..இந்த இரு திராவிடக் கட்சிகள்தான்..இவர்கள் ஒருவரை ஒருவர்..வெல்லும்போது...பணத்தால் வென்றார்கள் என ஒரு கட்சி மற்ற கட்சியின் மீது புகார் சொல்வது..வேடிக்கையானது..பழகிப்போன ஒன்று.

சங்கரன்கோவிலைப் பொறுத்தவரை..அதிமுக பற்றி அனைத்து கட்சிகளும்..'அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாம் இட்டிருந்தனர்..ஆடு, மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பணம் ஆகியவை கொடுக்கப்பட்டன' என்றுள்ளன.(திமுக மத்திய அமைச்சர்களும் அங்குதான் இருந்தனர்..முக்கியமாக பட்ஜெட் அன்று பழனிமாணிக்கம் இங்குதான் இருந்தார்)

இவற்றில் உண்மை இருக்கலாம்..ஆனால் எவ்வளவு பேருக்கு இப்படிக் கொடுக்கப் பட்டிருக்கும்..ஓரளவு வெல்வதற்கு தேவையான அளவு என்றால்..அதிமுக வின் வெற்றி அபரீதமாக உள்ளதே..பெற்ற வாக்குகள் 94977 வாக்கு வித்தியாசம் 68757..இது எப்படி..

இதற்கான காரணம் என நான் நினைப்பது...

மக்களுக்கு திமுக மீதான கோபம் இன்னமும் போகவில்லை (வேட்பாளர் டிபாசிட் இழந்துள்ளார்)

காங்கிரஸுடன் திமுக கூட்டு உள்ளவரை திமுக வை மக்கள் புறக்கணிப்பர்.

அதிமுக வை மக்கள் நம்புகின்றனர்..இவர்களுக்கு அவர்கள் மேல் என்பது போலத்தான் நம்பப்படுகிறது.

ஆளும் கட்சிக்கு ஓட்டளிக்க வில்லையெனில் நம் தொகுதி கவனிக்கப்படாது என்ற பயம்...இவற்றில் ஒன்றுதான்.



1 comment:

ரைட்டர் நட்சத்திரா said...

நம்பவைக்க படுகின்றதோ என்றே தோன்றுகிறது. துணிச்சலான பதிவு