Monday, February 13, 2012

மெரினா...சொல்வது என்ன?




"பசங்க" தந்த எதிர்பார்ப்பில் மெரினா வுக்கு விஜயம் செய்தால்....

எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தைத் தருகின்றன.

மெரினாவில் சிறுவர்கள்..ஒவ்வொருவருக்கும் ஒரு கதை..அதை சொல்ல முயன்ற பாண்டிராஜின் எண்ணத்திற்கு ஒரு வணக்கம்..ஆனால் நினைத்ததை சொல்லியிருக்கிறாரா?
சந்தேகம் தான்.

எந்த சிறுவர் பாத்திரத்தின் கதைகளும் மனதில் ஒட்டவில்லை..

உண்மையில் எனக்குத் தெரிந்த மெரினா கதை ஒன்று உண்டு..தந்தையை இழந்த தாய் படிக்கும் தன் மகனை பள்ளி விட்டு வந்ததும் சுண்டல் தூக்கை கையில் கொடுத்து அனுப்பியதை நான் அறிவேன்.அப்படிப்பட்ட மகனும் படித்து முன்னுக்கு வந்திருக்கிறான்..

ஆனால் பாண்டிராஜ் சொல்லும் பசங்க எல்லாம் வீட்டை விட்டு வந்தவர்கள்..அல்லது ஆதரவற்றவர்கள்.

படிக்க ஆசைப்படும் அம்பிகாபதியை அரசு தத்து எடுக்கும் நிலையிலும்..ஒரு அரசு ஊழியரே வந்து...தான் படிக்க வைப்பதாக உறுதி சொல்லி அழைத்து வந்துவிட்டு..மெரினாவிலேயே சுண்டலுக்கு விடுவதை ரசிக்க முடியவில்லை.ஒருவேளை அந்த தபால் ஊழியர் பாத்திரத்தை உயர்த்த வேண்டும் என இயக்குனர் நினைத்து விட்டாரோ//

காவல் அதிகாரி ஒரு பையனை அக்யூஸ்டு எனத் தேடுகிறார்..அனைத்து காவல் நிலையத்திலும் அவன் புகைப்படம் வேறு இருக்குமாம்..அவனைத் தேட இரு காவலர்களை சென்னைக்கு அனுப்புகிறார்.பணத்தை பற்றி கவலைப்படாது.அவர்களும் பையனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு சென்னையை சுற்றிப் பார்ப்பதிலும், தண்ணீ அடிப்பதிலும் காலத்தை கடத்துகின்றனர்.கடைசியில் அப் பையனை அழைத்து வந்தால்..அவன் செய்த குற்றமாகச் சொல்லப்படுவது... ஒரு அம்புலிமாமா கதையில் கூட நடக்காதது.

பையன்,.மருமகளிடமிருந்து..அவர்கள் வன்சொல் பொறுக்காமல் வீட்டைவிட்டு வெளியே வரும் போது தாத்தாவிற்கு அவ்வளவு வயது ஆகவில்லை.ஆனால் பையனின் பெயரைக் கெடுக்க வேண்டும் என பிச்சை எடுக்கிறாராம்.(ஆனால் பையன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை நமக்கு)..கடைசியில்..புல்லாங்குழல் விற்பவராக..மெரினா பையன் சொல்ல திருந்துகிறாராம்.இதில் இயக்குனர் என்ன சொல்கிறார்..மகன், மருமகள் மோசம் என்கிறாரா..பெரியவரின் வீண்பிடிவாதம் பற்றி சொல்கிறாரா....அனுதாபம் வரவேண்டிய பாத்திரம் ஆத்திரத்தையே வரவழைக்கிறது.

ஒண்ணுக்கு அடிப்பது, சிறுநீரை பிடிப்பது,ஓட்ட பந்தயம், கிரிக்கெட், குதிரைப் பந்தயம்..இப்படி கிட்டத்தட்ட அரை மணி நேரம் சிரமப்படாமல் திரைக்கதை.

கல்லூரி மாணவி..சும்மா..பொழு போக காதல்..தின்ன காதல்...பாண்டிராஜ்..பாவம் பெண்களை இப்படி சித்தரிக்க மனம் எப்படி உங்களுக்கு வந்தது.எவ்வளவு உண்மைக் காதலர்கள், இளம் தம்பதிகள்..(அவர்கள் வீட்டில் தனிமை கிடைக்காததால்) மெரினா வந்து..தங்கள் மனக்குறைகளை கொட்டித் தீர்க்கிறார்கள்..அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.

இவன் இல்லையேல் அவன் என பெண்களை சித்தரிப்பது...சாரி பாண்டிராஜன்..

மேலே சொன்னவை..சில விஷயங்களே...இதுபோல பல லாஜிக்கே இல்லா சம்பவங்கள்..

இதையும் மீறி மெரினா ஓடுகிறது என்றால்...  இயக்குநர் மீது உள்ள நம்பிக்கையில் வருகிறார்கள்..ஆனால் இயக்குநர் ஏமாற்றிவிட்டார்.


இன்னும் சற்று அழுத்தமாக சிந்தித்து..சிறப்பான திரைக்கதை எழுதியிருந்தால்...பசங்க படத்திற்கு பிறகு இயக்குனர் திறமை..'கிராஃப்' ஏறியிருக்கும்..இப்போது இறங்கிவிட்டது.அவ்வளவுதான்.


2 comments:

ஹேமா said...

நிறைய எதிர்பார்ப்பிருந்தது இந்தப் படத்திற்கு..உங்கள் விமர்சனம் ஆவலைக் குறைக்கிறதே !

aotspr said...

மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"