Tuesday, December 27, 2011

அன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு





வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு
 நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம்.
 ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.

நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு
முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.
ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்
 இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் இவ்வாறு தனது இமெயில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

(தகவல்-தட்ஸ்தமிழ்)

2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Advocate P.R.Jayarajan said...

பதிவுக்கு பாராட்டுகள்.