Tuesday, November 15, 2011

பாக்கியராஜின் அட்டகாசமான பதில்...




பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை.இந்த வார இதழில் வந்த ஒரு கேள்விக்கான பதிலை நான் மிகவும் ரசித்தேன்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி- பெண்கள் மனதை கடல் ஆழத்துக்கு ஒப்பிடுவது எதனால் ? (பதில் அசைவமாக இருக்க வேண்டும்)

பதில்- பொதுவா சில பெண்கள் மனசுலே இருக்கிறதை கண்டு பிடிக்க முடியாதுன்னு சொன்னா சுவாரஸ்யமாக இருக்காது.அதனால நீங்க கேட்ட அசைவ மேட்டரா சொல்றேன்.

ப்ரியாங்கிற நல்ல அழகிய பெண் கார்த்திக் அப்படிங்கற வாலிபனைக் காதலிச்சா.அவனை மணம் முடிக்க விரும்பி தன் தந்தைகிட்ட அச்செய்தியை தெரிவிச்சா.அவரோ,'நீ அவனை மணக்க இயலாது.கார்த்திக் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன் அம்மாவுக்கு இவ்விஷயம் தெரியாது.அவளிடம் இது குறித்து மூச்சு விடாதே' ன்னாரு.

ப்ரியாவும் ஒரு நல்ல மகளா கார்த்திக்கை மறந்துட்டு, ரகுங்கற வாலிபனை மணக்க முடிவு செஞ்சு தந்தையிடம் வந்து கூறினப்ப, அவர் மறுபடியும், 'ஐயோ, நீ ரகுவையும் மணமுடிக்க இயலாது.அவனும் உனக்குச் சகோதரன் முறைதான்.தயவு செய்து இதை உன் அம்மாவிடம் சொல்லிவிடாதே!'ன்னு தடை விதிச்சுட்டாரு.

தன் தாயிடம் போய் ஆலோசனைக் கேட்பதைத் தவிர வெறு மார்க்கம் இல்லன்னு உணர்ந்த ப்ரியா, தாயிடம் போனாள்.மகளின் பிரச்னையை ஏற்கனவே அறிந்திருந்த ப்ரியாவின் தாய், 'என் கண்ணே! கார்த்திக் அல்லது ரகு, இவர்களில் யாரை மணந்தால் நீ மகிழ்ச்சி அடைவாயோ, அவனை மணந்து கொள்ளலாம்! ஏனெனில்,, உன் அப்பா எனக்குத்தான் கணவர்.நான் அறிந்தவரை உன்னுடன் அவருக்கு உறவுமுறை கிடையாது!' ன்னு குண்டைத் தூக்கி போட்டாங்களாம்.

டிஸ்கி - இந்த பதிலில் உள்ள நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள்

1 comment:

ஹேமா said...

ரசனையோடு படிச்சு பார்வைக்கும் தந்திருக்கீங்க.நன்றி ஐயா !