Sunday, November 6, 2011

தினமலர் என்னும் அழகு மங்கை..




தினமலர் பத்திரிகையில் உடன்பிறப்பு என்ற பெயரில் ஒரு கட்டுரை இரு தினங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தது.

அது குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

'பாகுமொழி பேசுவது கண்டு,கேட்டு என் உடன்பிறப்புகள் யாரும் ஏமாறமாட்டார்கள்.எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.

அந்தக் கட்டுரையின் உள்நோக்கத்தை உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள்.ஏனெனில் அந்தப் பத்திரிகை நம்மைக் கொஞ்சி மகிழ்வது பூதகி, கண்ணனைக் கொஞ்சி மகிழ்வது போல நடித்து அவனைக் கொல்லவே துணிந்தாள் என்று பாரதத்தில் ஒரு கிளைக்கதை உண்டு, அந்தக் கிளைக்கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான் அந்த நாளேடு தாங்கிக்கொண்டு புறப்பட்டிருக்கிறது என்றால் அதில் துளியளவும் தவறில்லை.

அழகிய மங்கை உருவில் வந்து தாய்ப்பாசம் காட்டுவது போல நடித்து, கண்ணனை பாலருந்தச் சொல்லி அவனை கொன்றுவிட முயன்ற பாதகியாம் பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து, கழகத்தை வீழ்த்திட பகற்கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.அந்தப் படுபாவி பத்திரிகை வடிவத்திலேயே நம்மிடையே வருவர்,அந்த விஷ நாகங்களில் ஒன்று பச்சைப் பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாகுமொழி பேசுவதுக் கண்டு..கேட்டு..உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்.எச்சரிக்கையாகவே இருப்பார்கள்..'என்று கூறியுள்ளார்.

2 comments:

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை மந்திரங்களை ஒழுங்காகக் கற்ற, சொல்லக்கூடிய பார்ப்பான் உண்டா? தினமலரே பதில் சொல்!
Share

தகுதி

சுற்றிச் சுற்றி அவாள் எங்கே வருகின்றனர்?

இதோ: தினமலர் பேசுகிறது.

தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்: உலக அளவில், உயர் கல்வி படித்தோரின் எண் ணிக்கை, 23 சதவிகித மாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் இது 13.5 சதவிகிதம் தான். தற்போது, தமிழகத்தில் 18 சதவிகிதமாக உள்ளது. உயர்கல்வியில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

டவுட் தனபாலு: இதை அதிகரிக்க அருமையான வழி சொல்றேன்.. கடந்த தி.மு.க., ஆட்சியினர் செய்ததுதான்... பிளஸ் 2ல பாஸ் பண்ணாலே இன்ஜினியரிங் படிக்கலாம்; பெயில் ஆனா கூட கலைக் கல்லூரிகள்ல சேரலாம்னு சொல்லிடுங்க... உயர்கல்வி ஒசந்துடும்...! (தினமலர் 6.11.2011)

சுற்றிச் சுற்றி பார்ப்பனர்கள் எந்த இடத்துக்கு வருகின்றனர் பார்த்தீர்களா? தமிழர்களின் கல்விக் கண்களைக் குரூர மாகக் குத்துவதில் அவாளுக்கு அப்பேர்பட்ட குஷி! +2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி இல்லை என்று யார் சொன்னது? அவாளா ஒரு முடிவு எடுத்துக் கொண்டு, அந்தப் பாட்டுக்கு ஏற்ப தாளம் போடும் சூட்சமம் என்ன?

அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்கென தனிப் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்றால், அதனை எதிர்த்து தினமலர் கூட்டம் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அங்கே மட்டும் பயிற்சி - திறன் இவை தேவைப்பட வில்லையா?

அர்ச்சனை மந்திரங்களை ஒழுங்காகக் கற்ற, சொல்லக்கூடிய பார்ப்பான் உண்டா?

சர்.சி.பி. ராமசாமி அய் யரின் தலைமையில் கோயில் நிருவாகம், நிலைகளைப்பற்றி ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு 1960இல் நியமித்தது. அந்த அறிக்கை 1962இல் வெளி யிடப்பட்டது. கோயில் அர்ச்சகர்களின் தில்லுமுல்லுகள் பொய்க் கணக்குகளை விலா வாரியாக விவரித்ததே அந்த அறிக்கை. அனேகமாக அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் அனைவரும் தற்குறிகளாகவே இருக்கின்றனர். மந்திரங்களைத் தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாக, தப்பாக சொல்லுபவர்களாகவே இருக்கின்றனர் என்று அய்யர் அறிக்கை கூறுகிறதே!

+2 தேர்வு செய்தவர்களுக்கெல்லாம் பொறியியல் கல்லூரி படிப்பா என்று ஓலமிடும் தினமலர்களே, இதற்கு என்ன பதில்?

-----------------------மயிலாடன் அவர்கள் 7-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

SURYAJEEVA said...

தலைவர் எப்ப பூதகி எல்லாம் கொடூரமானவள் என்று நினைக்க தொடங்கினார்... ஆரிய திராவிட மாயை என்று சொல்லியதை யாராவது நினைவூட்டுங்கள்