Wednesday, October 26, 2011

தலைவர்களின் தீபாவளிச் செய்திகள்




ஜெயலலிதா - அந்த நாளில் அஞ்சாநெஞ்சனாய் அட்டூழியம் செய்துவந்த நரகாசுரனிடமிருந்து மக்கள் விடுதலையடைந்த நாளை தீபாவளியாய் கொண்டாடுகிறோம்.இன்றும் ஐந்து மாதங்களுக்கு முன் அந்த நிலைதான்..ஆனால் இன்று மக்கள் அஞ்சாமல் இருக்கிறார்கள் எனில்..அதற்கு முக்கிய காரணம் யார் எனச் சொல்லத்தேவையில்லை.மக்களுக்கு என் தீபாவளி வாழ்த்துகள்

கலைஞர்- மக்கள் செய்த தவறால் அன்று நரகாசுரனிடம் அவதிப்பட்டு கண்ணனால் விடிவுகாலம் வந்ததாய் கதை உண்டு.இன்று தெரிந்தே மக்கள் அதே போல் தவறு செய்துள்ளனர்.அவர்கள் செய்த தவறை இப்போதுதான் உணர்ந்துள்ளார்கள்.விடிவுகாலம் விரைவில் வரும் என நம்புவோமாக.அதுவரை என்னால் வெறும் வாழ்த்துகள் என்று மட்டுமே சொல்லமுடியும்.

தங்கபாலு- இவ்வளவுநாள் மாற்றி மாற்றி அரக்கர்களுடன் கூட்டணி வைத்திருந்தால்தான் அரக்கர்களை ஒழிக்கமுடியும் என்று தவறான எண்ணத்தை அழித்து..இனி வரும் காலங்களில் தனித்தே 'சம்ஹாரம்' செய்வோம் என்று மிச்சம் மீதி உள்ளவர்கள் இந்நாளில் சபதம் ஏற்போம்.

வைகோ-அரக்கனை ஒழிக்கும் தகுதி ஏகாதிபதியான நம்மைத்தான் சாரும் எனக் கூறி..அதற்கான சான்றாக இப்பண்டிகை அமைய வாழ்த்துகள்

ராமதாஸ்- சீப்பை ஒளித்து வைத்ததால் கல்யாணம் நிற்குமா? என்பார்கள். 'சீப்' பாய் நம்மை நினைப்பவர்கள் கல்யாணத்தை நிறுத்தும் சீப்பாய் நம்மை எண்ணும் காலம் வரவேண்டும்.அதற்காக அனைத்து பட்டாசுக் கடைகளிலும் போராட்டம் நடத்தும் நாளையே..நான் தீபாவளி என்பேன்.அதுவரை வாழ்த்துகளைச் சொல்ல மாட்டேன்

சிபிஐ- தனிமரம் தோப்பாகாது என்று கூறுபவர்கள், தோப்பில் ஒவ்வொரு மரமும் தனித்தனியாய் நிற்பதை ஏன் மறந்தார்கள்.அவர்களுக்கு பாடம் புகட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.அதுவரை வாழ்த்துகள்

சிபிஎம்-எங்களுடன் கூட்டு சேர்ந்ததால் ஜெ ஆட்சி அமைக்க முடிந்தது..எங்களுடன் கூட்டு சேர்ந்ததால் தேமுதிக உள்ளாட்சித் தேர்தல்களில் 3ஆம் இடத்தைப் பெற்றது.ஏணி நிற்கும் இடத்திலேயே நிற்கிறது..ஏறியவர்கள் மறந்துவிடுகிறார்கள்.இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த ஏணி அவர்களை ஏற அழைத்துக் கொண்டே இருக்கும்.அதற்காக வாழ்த்துகள்

தேமுதிக-தோல்வி என்பது நமக்குப் பிடிக்காத ஒரே தமிழ்ச்சொல்..ஆகவேதான் அது விடாமல் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.கடவுள் சொன்னதால் முன்னர் ஜெ உடன் கூட்டணி வைத்தேன்..இனி கடவுளே வந்து சொன்னாலும் கூட்டணி கிடையாது.தேர்தல்களில் 10 சதவிகித வாக்குகளே பதிவாகும் நாள் வரத்தான் போகிறது.அப்போது 10 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கும் நாம் ஜெயித்து ஆட்சி அமைப்போம்.தொண்டர்கள் அதுவரை துவள வேண்டாம் என இந்நாளில் வாழ்த்துகிறேன்.  


8 comments:

SURYAJEEVA said...

விடுமுறை நாள் வாழ்த்துக்கள் என்று கலைஞர் சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்

goma said...

நகைச்சுவையான வாழ்த்துக்கள் அருமை

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

தீபாவளி வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

Good.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி DrPKandaswamyPhD