Tuesday, September 27, 2011

உரைமுடிவு காணான்.....




அரசனின் சபை கூடியுள்ளது..
நாட்டைக் கொள்ளையடித்த திருடன் மாட்டிக் கொண்டுவிட்டான்..
அரசன் விசாரித்து..அந்தத் திருடனுக்கு தண்டனை வழங்கினார்..
இந்நிலையில்..அரசபைக்கு வேகமாக ஒருவன் ஓடி வந்தான்..
அவன் பதற்றத்துடன்..'அரசே..மன்னிக்க வேண்டும்..தவறு நிகழ்ந்துவிட்டது..நாடு கொள்ளை போனதற்கு முழுக் காரனம்..இந்த கொள்ளையன் மட்டுமல்ல..இவனுடன் சேர்ந்த வேறொரு கொள்ளையனும் உள்ளான்..அவனையும் விசாரித்து தண்டிக்க வேண்டும்..' என்றான்.
அரசன் தலைமை அமைச்சரைப் பார்க்க,..அவர்..'அரசே..மிகவும் கஷ்டப்பட்டு..இந்த கொள்ளையனைக் கண்டுபிடித்து..அவன் மீது முழு குற்றச்சாட்டையும் சுமத்தி..அதையும் பல தடைகளையும் மீறி நிரூபித்துள்ளோம்..வழக்கும்..தங்களது கோர்ட்டிற்கு வந்து இவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது.இப்போது புதியதாக ஒருவனும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றான்..என்றால்..அதை விசாரித்து..நிரூபிக்க கால அவகாசம் வேண்டியுள்ளது..அதனால்..இந்த வழக்கு விசாரணை கால தாமதம் ஆகும்..ஆகவே..ஏற்கனவே தண்டிக்கப் பட்ட இந்த கொள்ளையனை குற்றவாளியாக்கி விட்டோம்.இனி புதியதாக யாரையும் வழக்கில் சேர்த்து இவ்வழக்கை நீட்டிக்க வேண்டாம்' என்றார்.
நீதி வழுவா அரசனுக்கு..என்ன செய்வது எனத் தெரியவில்லை..மேலும்..அவனுக்கு முந்தைய அரசர்களில் ஒருவர் அவசரப்பட்டு நிரபராதி ஒருவனுக்கு தண்டனை வழங்கப்பட அதனால் ஊரும் நாசமாகி..அவ்வரசனும் மடிந்த நிகழ்ச்சிகள் நினைவில் வந்தன.


5 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

test

aotspr said...

நல்ல கதை........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ரிஷபன் said...

இந்தக் கதை மன்னர் ஆட்சியில்தானா நடந்தது?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரிஷபன்