Wednesday, December 16, 2009

கலைஞரின் மருத்துவக் காப்பீடு திட்டம்

சிறந்த மருத்துவமனைகள் இந்தியாவில் சிறப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக தமிழ்நாடு மருத்துவத்தில் தலை சிறந்து விளங்குகிறது.

அப்பல்லோ,விஜயா,ராமசந்திரா,சங்கர நேத்ராலயா,டாக்டர் அகர்வால்,ஃப்ரண்ட்லைன்,மெட்ராஸ் மெடிகல் ,மியாட் என சென்னையில் பிரபல தனியார் மருத்துவ மனைகளும்..ராயப்பேட்டா,ஸ்டான்லி,பொது மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவ மனைகளும் சிறப்பாக செயல்பட்டு வரும் சில மருத்துவமனைகள்.

சென்னைக்கு, இந்தியாவில் இருந்து மட்டுமல்ல மற்ற வெளிநாடுகளிலிருந்தும் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் சிறுமிக்கு..சென்னையில் இலவச சிகிச்சை, இராக் குழந்தைக்கு சென்னை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை என குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளின் புகழ் செய்தித் தாள்களில் அவ்வப்போது வந்துக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் 2004ஆம் ஆண்டு கணக்குப்படியே 5 லட்சத்திற்கும் அதிக மருத்துவர்கள்,ஏழு லட்சத்திற்கும் அதிக நர்ஸுகள் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது.இப்போது மேலும் அதிகரித்திருக்கக் கூடும்.

நம் நாட்டில் அறுவைசிகிச்சைக்கான மருத்துவ செலவு குறைவு. உதாரணமாக அமெரிக்காவில் இதய அறுவை சிகிச்சைக்காக பதின்மூன்று லட்சம் செலவாகிறது என்றால்..அதே அறுவை சிகிச்சை நல்ல தரத்துடன் இந்தியாவில் இரண்டரை லட்சத்தில் செய்திட முடிகிறது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள்,திறமை மிக்க மருத்துவர்கள்,அன்பான நர்ஸ்கள் அனைத்திற்கும் மேலாக குறைவான செலவு போன்ற காரணங்களுக்காக உலகத்தின் பல மூலைகைளிருந்தும் நம் மருத்துவமனைத் தேடி வருகிறார்கள்.

அது சரி..வசதி இல்லாதவர்கள்..வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நிறைந்த நம் நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைகள் இருந்து என்ன பயன்? என்று கேட்கறீர்களா?

அமெரிக்காவில் உள்ளது போல மருத்துவத்திற்கான இன்ஷ்யூரன்ஸ் திட்டம் இங்கும் வரவேண்டும்.

அதற்கு முதன்முதலாக கலைஞரின் அச்சாரம் போட்டுள்ளது எனலாம்.இத் திட்டத்தை பலர்..பலவிதமாக விமரிசிக்கலாம்.ஆனாலும்..ஆண்டிற்கு 72000 க்குள் வருமானம் உள்ளவர்கள் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை என்பது கண்டிப்பாக சிறந்த திட்டம்.தயவு செய்து இதில் யாரும் அரசியலை புகுத்த வேண்டாம்.போகப் போக வருமான வரம்பும்..சிகிச்சைக்கான பணமும் அதிகரிக்கக்கூடும்..இது போன்ற திட்டங்கள் இந்தியா முழுதும் அமுல் படுத்தப் பட வேண்டும்.

இது போன்ற திட்டத்தில் மத்திய அரசின் பங்கும் இருக்க வேண்டும் .

நாட்டில் மருத்துவ வசதியின்றி இறக்கும் மக்கள் என்ற ஒன்று இருக்கவே கூடாது.

இலவச திட்டங்கள்...தேவையில்லா இடைத் தேர்தல்கள் ஆகியவற்றைக் குறைத்து..இது போன்ற திட்டங்களை மாநில அரசுகளும்..மத்திய அரசும் செயல் படுத்த வேண்டும்..

நடக்குமா?

5 comments:

vasu balaji said...

உண்மையிலேயே உருப்படியான மக்கள் நலனுக்கான திட்டம் சார் இது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வானம்பாடிகள்

Hai said...

aanaal ethukku kalangar kaappeetth thittammnu peyar vachchangov. yaaru athu kalangaru cinima kalangara illa naadagam nallap podara kalangara illa mudhlaik kanneer vadikkira kalangara yov nallath thittamaam nollath thittam pooi parungaiya andhravula ysr uyiroda irnhthirundha indha aalum mahanum kappiyadikka kaapiyadikka inneram paththu thittam poottirupparu. andra vin arogyasri inga kalaingar kaappeettup pattam.athu anga vanhthu anju varusamaachchuia. summa ennai podatheengaiya.

Hai said...

aanaal ethukku kalangar kaappeetth thittammnu peyar vachchangov. yaaru athu kalangaru cinima kalangara illa naadagam nallap podara kalangara illa mudhlaik kanneer vadikkira kalangara yov nallath thittamaam nollath thittam pooi parungaiya andhravula ysr uyiroda irnhthirundha indha aalum mahanum kappiyadikka kaapiyadikka inneram paththu thittam poottirupparu. andra vin arogyasri inga kalaingar kaappeettup pattam.athu anga vanhthu anju varusamaachchuia. summa ennai podatheengaiya. anga 109 110 pooi 1008 vandhachchu ippa inga 108 bord mattum konjam theriyudhu.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி prabakaran