Wednesday, December 2, 2009

ஆ(ற)ரத்தழுவினேன்


கடலலைகள்

கரையைக் கண்டு மிரண்டு

கரைந்து உள்ளிடுதலும்

கார்முகில் கண்டு

கலாபம் விரிக்கும் தோகையும்

விடியலில் விண்ணின்

வண்ணக் கலவையும்

ஆலம் விழுதுகளின்

ஆகம் தழுவலும்

விதிமீறல் அன்று

இயற்கை

இல்லா ஒன்றை நாடும்போது

இருக்கும் ஒன்றையும்

இழக்கலாமா

வெற்றி இலக்கிற்காக

வீறு கொண்டு முயன்றால்

தோற்பது யார்..

விட்டுக்கொடுத்தேன் வெற்றியை

அனைவரும் வெறுக்கும் தோல்வி

அணங்கை

ஆ(ற)ரத் தழுவினேன்

(இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

16 comments:

vasu balaji said...

நல்லா இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

கமலேஷ் said...

நல்லா இருக்குங்க...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கமலேஷ்

Vidhoosh said...

அருமையாக இருக்குங்க.
--வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வித்யா

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு டிவிஆர்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பா.ரா.

இரவுப்பறவை said...

நல்லா இருக்குங்க..
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இரவுப்பறவை

பூங்குன்றன்.வே said...

கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பூங்குன்றன்.வே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் Imayavaramban

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நவாஸுதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சக்தி த வேல்