Saturday, November 15, 2008

தமிழக கட்சிகளும்...கூட்டணியும்..

இப்போதெல்லாம்..தனியாக ஒரு கட்சி அரசியலில் நின்று அறுதிபெரும்பான்மை வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம்..அதற்கான காரணம் இரண்டு..

1.கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகப்போனது
2.எந்த ஒருதொகுதியிலும் 100% ஓட்டுகள் பதிவாகாதது..ராமன் ஆண்டால் என்ன ராவணண் ஆண்டால் என்ன? யார் வந்தாலும் நமக்கு ஒன்றுதான் என்ற எண்ணத்தில்..கிட்டத்தட்ட 30% மேல் ஓட்டு போடுவதில்லை..இவர்கள்தான் முதலில் கடமை தவறியவர்கள்.

சரி தலைப்புக்கு வருவோம்..

தமிழகத்திலும்..கூட்டணி என்பது..தவிர்க்க முடியாததாகி விட்டது..தி.மு.க., அ.தி.மு.க., இக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகளைப் பொறுத்து வெற்றிக் கனியை பறிக்க முடிகிறது.

1996-01ல் கலைஞர் ஆட்சி..திறம்பட இருந்தது..மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்..ஆகவே 2001 தேர்தலில் வெற்றிபேறுவோம் என கலைஞர் நினைத்
தார்..ஆனால்..சூடுபட்ட பூனையான ஜெ..மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து..ஒரு பலமான கூட்டணி அமைத்தார்...வெற்றி பெற்றார்..

அடுத்த தேர்தலில்..அதாவது..பார்லிமென்ட் தேர்தலில்..கலைஞர் பல கட்சிகளை அரவணைத்துக் கொண்டார்..40 தொகுதியும்(39+1)வென்றார்.அதே கூட்டணியை க்காப்பாற்றி 2006 சட்டசபை தேர்தல்...கட்சிகள் அதிகம் என்பதால்..தொகுதி ஒதுக்கீடு..தி.மு.க.போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை குறைத்தது.இதனால் கூட்டணி வெற்றி பெற்றாலும்..தி.மு.க.அறுதி பெரும்பான்மை பெறவில்லை.இச்சமயம் விஜய்காந்த் வேறு..கட்சி ஆரம்பித்து..அதனால்..வோட்டுகள் சிதறின.

இன்றைய நிலையில்..பா.ம.க.,கம்யூனிஸ்ட்கள்..தி.மு.க.கூட்டணியில் இல்லை.

அடுத்த வருடம் வரும்..பாராளுமன்ற தேர்தலில்..தி,மு,க.,கூட்டணி வெல்ல வேண்டுமானால்..காங்கிரஸ் தவிர்த்து..பா.ம.க போன்ற கட்சிகளும் உடன் இருக்க வேண்டும்..அதனால் தான் அதை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன..

அ.தி.மு.க., வும்..சில கட்சிகளுக்கு வலை விரித்து வருகிறது.(தற்போது வைகோ மட்டுமே உடன் உள்ளார்)

இடையே..விஜய்காந்த்துடன்..கம்யூனிஸ்ட்..பாமக..சேர்ந்தாலும் ஆச்சர்யப்ப்படத் தேவையில்லை..

காங்கிரஸை இது போன்ற சமயங்களில் நம்ப முடியாது..விஜய்காந்த்தையும் சில காங்கிரஸ் தலைவர்கள் சந்த்தித்துள்ளனர்.

அனுபவசாலி கலைஞருக்கு ..காங்கிரஸ் பற்றித் தெரியும்..மேலும் இன்று தமிழகத்தில்..மக்கள்..மின்வெட்டு..விலைவாசி..என்றெல்லாம் அதிருப்தியில் உள்ள நிலையில் காங்கிரஸ் உடன் இல்லை எனில்..முடிவு என்ன ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு..பார்த்ததால் தான் கலைஞர்..இலங்கை பிரச்னையில்..மத்ய அரசின் நிலை திருப்தியாய் இல்லை என்றாலும்..கடுமையாக அவர்களை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதே சமயம்..சாமான்யனுக்கும்..இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்..கலைஞர் தலைமைதான் வேண்டும்..

பார்ப்போம்...என்ன நடக்கிறது..என்று.

4 comments:

வலைஞர்! said...

கணக்கு காமிச்சாச்சு...ஓகே ஸ்டார்ட் மீஜிக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வலைஞர்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஓகே ஸ்டார்ட் மீஜிக்///

:-))))

மங்களூர் சிவா said...

பார்ப்போம்...என்ன நடக்கிறது..என்று.