Friday, October 31, 2008

இறுதிவரை பிரியாதிருக்க...(கவிதை)

இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

6 comments:

மணிகண்டன் said...

என்ன சார் கலக்கறீங்க ?

rapp said...

திருமண நாள் வாழ்த்துக்கள் சார்:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//rapp said...
திருமண நாள் வாழ்த்துக்கள் சார்:):):)//


என் மணநாள் என்று யார் சொன்னது? அடடா..ராப்..வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவீர்கள் போல இருக்கிறதே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
என்ன சார் கலக்கறீங்க ?//


வருகைக்கு நன்றி மணி

நசரேயன் said...

ஐயா அருமையான கவிதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
நசரேயன்