Tuesday, June 3, 2008

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்.

No comments: