Tuesday, June 3, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

1.அதி புத்திசாலி அண்ணாசாமி,ஒரு சமயம் அமெரிக்கா போனார்.அங்கு ஒரு அமெரிக்கன் ஒரு இடத்தை அவரிடம்
தோண்டச் சொன்னான்.100 அடி தோண்டியதும் ஒரு சிறு wire கிடைத்தது.உடனே அமெரிக்கன் 100 வருஷம்
முன்னமே எங்களிடம் ஃபோன் இருந்தது.என்றான்.அந்த அமெரிக்கன் ஒரு முறை இந்தியா வந்தான்.அவனை
அண்ணாசாமி ஒரு இடத்தை தோண்டச்சொன்னார்.ஒன்றும் கிடைக்கவில்லை.உடனே'பார்த்தீரா..400 வருஷம்
முன்னரே எங்களிடம் wireless இருந்தது என்றார்.

2.ஒரு சமயம் அண்ணாசாமி வட இந்தியா சுற்றுலா சென்றார்.அவருடன் அவர் மனைவியும்,மகனும் சென்றனர்.
அண்ணாசாமிக்கு lower berth மனைவிக்கு middle berth மகனுக்கு upper berth கொடுத்திருந்தார்கள்.
ஒரு ஸ்டேஷனில் காபி சாப்பிட அவரும்.மகனும் இறங்கினர்.அச்சமயம் தமிழ் தெரியா வட இந்தியன் வண்டியில்
ஏறி upper berth தில் படுத்துவிட்டான்.ரயிலில் ஏறிய அண்ணாசாமி தன் மகனிடத்தில் வேறொருவன் படுத்திருந்ததைப் பார்த்தார்.உடனே tte ஐப் பார்த்து தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கூறினார்.'see sir..that man sleeping top of my wife is not giving birth to my child'

3.ஒரு ஆங்கிலேயர் கொடுத்த ஒரு partyக்கு அண்ணாசாமி தன் மனைவி,மகன்,மகளுடன் சென்றார்.அந்த
ஆங்கிலேயனுக்கு தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.
I annasaamy
she mywife
boy my kid
girl my kidney

4.ஒரு சமயம் அண்ணாசாமி லண்டன் சென்று திரும்பி வந்தார்.பின் மனைவியிடம்..நான் பார்க்க வெளிநாட்டுக்காரன்
மாதிரியா இருக்கிறேன்? என்றார்.
மனைவியோ 'இல்லயே" என்றாள்
பின் மகனைக் கூப்பிட்டு 'நான் பார்க்க வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கிறேன்?' என்றார்.
அவனும் 'இல்லயே' என்றான்.
உடனே அண்ணாசமி'லண்டனில் எல்லாரும் பொய் சொல்கிறார்கள்.என்னைப்பார்த்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்கிறேன்னு பொய் சொல்றாங்க'என்றார்.

2 comments:

கோவி.கண்ணன் said...

//உடனே'பார்த்தீரா..400 வருஷம்
முன்னரே எங்களிடம் wireless இருந்தது என்றார்.//

ராதாகிருஷ்னன் ஐயா,
உங்கள் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் அருமையாக இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கோவி. நன்றி