Thursday, June 19, 2008

வாய் விட்டு சிரியுங்கள் - 13

 


1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்
மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'
என்று போடறாங்களே!!

2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலை
ஏன்?
குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.

3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற
அவர் பொண்ணு சோனியா இருக்கு..கேட்டா என் தலைவி ஞாபகமா அப்பிடியே இருக்கட்டும்னு சொல்றார்

4.தமிழ் டீச்சரை லவ் பண்ணினது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினா.. அதில் எழுத்துப் பிழை,சந்திப்பிழைன்னு ஏதாவது தப்பு கண்டுபிடிச்சுக்கொண்டே
இருக்கா..

5.அப்பா-நேற்று கணக்கு ஹோம் ஒர்க்கை என்னை போடச்சொன்னே..இன்னிக்கு நீயே போடறே
மகன்- யார் போட்டா என்ன..இரண்டு பேரும் தப்பாத்தானே போடப்போறோம்.

6.என் மனைவி ஒரு தேவதை
நீ அதிர்ஷ்டக்காரன்..என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கா

No comments: