Tuesday, June 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 12

பொண்ணு வேலைக்கும் போகணும்,நல்லாவும் சமைக்கத் தெரியணும்...இப்படி இரண்டும் சேர்ந்த பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்
தனித்தனியா கிடைச்சாலும் ..இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்.

2.என்ன சப்பாத்தி பண்ணியிருக்கே..முதல் சப்பாத்தி சாப்பிட்டேன்..இரண்டாவது மெல்லவே முடியலை..
அது சப்பாத்தி இல்ல...பேப்பர் பிளேட்..அதிலேதான் சப்பாத்தியை போட்டுக் கொடுத்தேன்

3.உனக்கு பின்னாலே சீட்ல வேலை செய்யறவர் பின்னழகை ரசிப்பார்னு சொல்றியே..நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா?
அவர் குண்டூசியின் அழகை ரசிப்பதை தடுக்க நான் யார்?

4.என்ன டாக்டர்..வலது கால்லே ஆபரேஷன் பண்றதுக்கு பதிலா..இடது கால்லே பண்ணிட்டீங்களே
அப்படியா? சரி..என் ஃபீஸ் ல 50% டிஸ்கவுண்ட் பண்ணிடறேன்.

5.நம்ம பையன் 50 பைசா காசை முழுங்கிட்டான்.டாக்டர் கிட்ட உடனே போகணும்
சரி..டாக்டர் கிட்ட 50 பைசான்னு சொல்லாதே..நம்மை கேவலமா நினைப்பார்.5 ரூபாய் முழுங்கிட்டான்னு சொல்லு.

6.அம்மா- (மகனிடம்) நீ என் கைப்பையிலிருந்து காசு திருடினதை அப்பா கிட்ட சொல்லப் போறேன்
மகன்- சொல்லேன்.நானும் அப்பா பாக்கெட்டிலிருந்து நீ பணம் எடுத்ததை அப்பா கிட்ட சொல்றேன்.

No comments: